உடனடிச்செய்திகள்

Monday, December 22, 2008

திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் த.தே.பொ.க. நடத்திய பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்து திருச்செந்தூர் குறும்பூரில் 21.12.2008 அன்று மாலை தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன், துரைசிங், ஞானசேகரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்வில் பல அமைப்புகளும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT